இலங்கை செய்தி

மகிந்த, கோட்டா மற்றும் பசிலின் பிரஜா உரிமை நீக்கப்பட வேண்டும்

mahinda rajapakse

மகிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ச, பசில் ராஜபக்ச உள்ளிட்ட 7 பேரின் பிரஜா உரிமை நீக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் முன்மொழிந்தார்.

நாட்டை திவாலாக்க இவர்கள் உழைத்தார்கள் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

முதற்கட்டமாக விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதியால் மாத்திரமே அதனைச் செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது எதிர்க்கட்சித் தலைவரினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது.

அடிப்படை உரிமையை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றினால் தீர்ப்பளிக்கப்பட்டவர்களின் பிரஜா உரிமையை நீக்கும் நடவடிக்கை ஆரம்பிக்க வேண்டி இருப்பது விசேட ஜனாதிபதி ஆணைக்குழு ஊடாகவாகும்.

அதனை ஜனாதிபதியால் மாத்திரமே செய்ய முடியும். அதனால் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு நாட்டில் இருக்கும் 220 இலட்சம் மக்கள் சார்ப்பாக ஜனாதிபதியை கேட்டுக்கொள்கிறேன்.” அவர் கூறியுள்ளார்.

(Visited 8 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!