அரசியல் இலங்கை செய்தி

மீண்டும் கொழும்பில் குடியேறினார் மஹிந்த! பின்னணி என்ன?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) மீண்டும் கொழும்பில் (Colombo) குடியேறியுள்ளார் என தெரியவருகின்றது.

நுகேகொடை (Nugegoda) , மிரியான (Mirihana) பகுதியிலேயே அவர் குடியேறியுள்ளார் என சிங்கள நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அரசியல் நடவடிக்கை, இராஜதந்திர சந்திப்புகள் மற்றும் மருத்துவ சிகிச்சை என்பவற்றைக் கருதியே மஹிந்த மீண்டும் கொழும்பு வந்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.

கொழும்பு, 7 விஜேராம மாவத்தையிலுள்ள (Wijerama Mawatha) அரசாங்க உத்தியோகப்பூர்வ வதிவிடத்திலேயே மஹிந்த ராஜபக்ச தங்கி வந்தார்.

எனினும், முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய சிறப்புரிமைகளை நீக்கும் சட்டம் நீக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து மஹிந்த வெளியேறினார்.

தங்காலையில் (Tangalle) உள்ள தமது பூர்வீக இல்லமான கால்டன் (Carlton House) இல்லத்துக்கு மஹிந்த ராஜபக்ச சென்றிருந்தார்.

மக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் நாளாந்தம் அவரை சந்திக்க வருவது தொடர்பான செய்திகளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சி வெளியிட்டு வந்தது.

இந்நிலையிலேயே அவர் கொழும்பு வந்துள்ளார். நுகேகொடை மரியான பகுதியிலேயே கோட்டாபய ராஜபக்ச, சமல் ராஜபக்ச ஆகியோரின் வீடுகளும் அமைந்துள்ளன.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!