ஐரோப்பா

ஜேர்மனின் ஒரு திட்டத்தை பிரான்ஸில் பின்பற்ற விருப்பம் தெரிவித்துள்ள மேக்ரான்

ஜேர்மனி வழங்கும் குறைந்த கட்டண ரயில் திட்டம் போன்றதொரு திட்டத்தை பிரான்சிலும் அமுல்படுத்த பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஜேர்மனி தொடர்ச்சியாக பல்வேறு குறைந்த கட்டண ரயில் திட்டங்களை அறிமுகப்படுத்திவருகிறது.ஜேர்மனி 49 யூரோக்கள் பயணச்சீட்டு ஒன்றை அறிமுகம் செய்தது. அது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. பின்னர், வெறும் 10 யூரோ பயணச்சீட்டு ஒன்றை அறிமுகம் செய்தது. அதுவும் அமோக வரவேற்பைப் பெற்றது.

ரயிலில் பயணக்கட்டணம் குறைவாக இருப்பதால், பலர் தங்கள் வாகனங்களை விட்டு விட்டு ரயிலில் பயணிக்கத் துவங்குகிறார்கள். இதனால், நாட்டில் எரிபொருள் மிச்சமாவதுடன், காற்று மாசு ஏற்படுவதும் குறைகிறது. மக்களுக்கும் மகிழ்ச்சி. ஆகவேதான் அரசுகள் இதுபோல் சலுகை விலை பயணச்சீட்டுகளை அறிமுகம் செய்கின்றன.

ஜேர்மனியின் ஒரு திட்டத்தை பின்பற்ற பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் விருப்பம் | Emmanuel Macron Say Low Cost Train France

ஜேர்மனியைப் போலவே, பிரான்ஸ் உள்ளூர் ரயில்களிலும் சலுகை விலை பயணச்சீட்டுகளை அறிமுகம் செய்ய விரும்புவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் சிலர், ஜேர்மனியைப் போலவே பிரான்சிலும் மாதம் ஒன்றிற்கு 49 யூரோக்கள் மட்டுமே கட்டணம் கொண்ட ரயில் பயணச்சீட்டை அறிமுகம் செய்ய பிரான்ஸ் விரும்புகிறதா என்று கேட்டனர்.

தான் அந்த திட்டத்துக்கு ஆதரவாகவே உள்ளதாக தெரிவித்த மேக்ரான், இந்த திட்டத்தை பின்பற்ற விரும்பும் அனைத்து பகுதிகளிலும் அதை துவங்க தான் போக்குவரத்து அமைச்சரைக் கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

(Visited 7 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்