இலங்கை

கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியில் கள ஆய்வுகளை மேற்கொண்ட எம்.ஏ. சுமந்திரன்!

திருகோணமலை- கன்னியா வெந்நீர் ஊற்றப் பகுதிக்கு (04) ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டு அங்குள்ள பிள்ளையார் கோவிலின் சிதைவுகளையும், பௌத்த விகாரையின் கட்டுமானங்கள் மற்றும் சிலையினையும் பார்வையிட்டார்.

திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலயம் இருந்த பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினால் அகழ்வுப்பணி மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் சுமந்திரனின் இந்த விஜயம் வந்துள்ளது.

இதன்போது பிள்ளையார் ஆலயத்தின் அறங்காவலரும் தர்மகர்த்தாவுமாகிய கோகிலரமணியுடனும் கலந்துரையாடலிலும் சுமந்திரன் ஈடுபட்டார்.

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசனும் அவருடன் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை குறித்த காணியில் விகாரை அமைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாகவும் அதனை நிறுத்தக் கோரியும்  காணியின் உரிமையாளரும், பிள்ளையார் ஆலயத்தின் அறங்காவலருமான கோகிலரமணி என்பவரால் திருகோணமலை மேல் நீதிமன்றி 29.07.2019 அன்று வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதற்கு ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகி வாதாடியிருந்தார்.

குறித்த வழக்கானது 6 நிபந்தனைகளுடன் 19.03.2021 அன்று இணக்கப்பாட்டிற்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!