புலம்பெயரும் இலங்கை தொழிலாளர்களுக்கு குறைந்த விலை விமான டிக்கட்

புலம்பெயரும் இலங்கை தொழிலாளர்களுக்கு குறைந்த விலையில் விமான டிக்கட் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாரஹேன்பிட்டியில் உள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் சலுகை விலையில் விமான டிக்கெட்டுகளை வழங்குவதற்கான நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்லும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான அரசாங்கத்தின் புதிய திட்டத்திற்கமைய, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவின் தலைமையில் நிலையம் நேற்று திறந்து வைக்கப்பட்டது.
சாதாரண சந்தை விலையை விட குறைந்த விலையில் விமான டிக்கெட்டுகள் இங்கு பெற்றுக்கொள்ள முடியும்.
மேலும் உலகின் எந்த நாட்டிலும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் செல்லும் அனைத்து தொழிலாளர்களும் இங்கு குறைந்த விலையில் விமான டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ள முடியும் என்பது சிறம்பம்சமாகும்.