உலகம் செய்தி

தென்கொரியாவில் பாதசாரிகள் மீது மோதிய லொறி – 02 பேர் பலி!

தென் கொரியாவின் புச்சியோன் (Bucheon) நகரில் உள்ள சந்தை தொகுதியில் லொறியொன்று பாதசாரிகள் மீது மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. இதனால் 18 பேர் காயமடைந்துள்ளதாக  தீயணைப்பு மற்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் 60 வயதுடைய அடையாளம் தெரியாத லொறி ஒட்டுநர் ஒருவரை கைது செய்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் தனது வாகனம் பழுதடைந்ததாகவும், பாதுகாப்பு கேமரா காட்சிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும் ஓட்டுநர் கூறியுள்ளார்.

காயமடைந்த 18 பேரில் 11 பேர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

(Visited 3 times, 3 visits today)

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!