ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் வீதியில் சிகரெட் துண்டை வீசியவருக்கு அதிர்ச்சி – 800 பவுண்ட் அபராதம்

பிரித்தானியாவில் சிகரெட் துண்டை வீதியில் வீசிய நபருக்கு சுமார் 800 பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மே 23 ஆம் திகதி கார்ல் ஸ்மித் (Carl Smith) புரோம்லி நகரில் சிகரெட் துண்டை வீதியில் வீசியுள்ளா்.

இந்த நிலையில் அவர் தனக்கு எதிராக குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஆண்டு செப்டம்பர் முதல் புரோம்லியில் குப்பை போட்டதற்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 12ஆவது வழக்கு இதுவாகும்.

குற்றவாளிகள் மொத்தம் 6,000 பவுண்டுக்கும் அதிகமாக அபராதம் செலுத்தியுள்ளனர்.

குப்பை போடுவது பெரும் பிரச்சினையாக இருப்பதாக புரோம்லி நகர மன்றத்தின் நிர்வாகக் கவுன்சிலர் கூறினார்.

வீதிகளை சுத்தம் செய்வதற்கான செலவு பல மில்லியனை எட்டிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

(Visited 46 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!