தென் கொரிய அதிபர் தேர்தலில் லிபரல் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி

தென் கொரியாவின் தாராளவாத கட்சி வேட்பாளர் லீ ஜே-மியுங், நடந்த திடீர்த் தேர்தலில் வெற்றி பெற்று அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
லீ ஜே-மியுங்யின் இந்த வெற்றி ஆசியாவின் நான்காவது பெரிய பொருளாதாரத்தில் ஒரு அரசியல் மாற்றத்திற்கு வழிவகுக்கும்.
தென் கொரியாவின் 44.39 மில்லியன் தகுதியுள்ள வாக்காளர்களில் கிட்டத்தட்ட 80% பேர் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர், இது 1997 க்குப் பிறகு நாட்டில் நடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கான அதிகபட்ச வாக்குப்பதிவு ஆகும்.
தேசிய தேர்தல் ஆணையத் தரவுகளின்படி, 99% க்கும் அதிகமான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், ஜனநாயகக் கட்சியின் லீ ஜே-மியுங் 49.3% வாக்குகளையும், PPP வேட்பாளர் கிம் மூன்-சூ 41.3% வாக்குகளையும் பெற்றனர்.
(Visited 2 times, 1 visits today)