இந்தியா

தீவிரவாதத்துக்கு எதிராக ஒன்றிணைவோம்: இந்தியா, ஜேர்மன் அழைப்பு!

“ தீவிரவாதத்தை எதிர்த்துப் போரிட உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும்.”

இவ்வாறு இந்தியா மற்றும் ஜேர்மன் ஆகிய நாடுகளின் பிரதமர்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.

இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஜேர்மன் பிரதமர் பிரட்ரிக் மெர்ஸ், பிரதமர் மோடியுடன் இரு தரப்பு சந்திப்பின் ஈடுபட்டார்.

இதன்போதே இரு நாட்டு பிரதமர்களும் இவ்வாறு வலியுறுத்தியுள்ளனர்.

ரஷ்யா, உக்ரைன் மோதல், காசா நிலைமை மற்றும் பிற உலகளாவிய சவால்கள் குறித்தும் இருவரும் விரிவாக பேச்சு நடத்தியுள்ளனர்.

அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அமைதியான முறையில் தீர்வு காண்பதையே இந்தியா எப்போதும் ஆதரிக்கிறது என்று பிரதமர் மோடி இதன்போது தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் – பஹல்காம் தீவிரவாத தாக்குதல், டெல்லி கார் குண்டு வெடிப்பு ஆகியவற்றுக்கு இச்சந்திப்பின்போது கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவும் ஜேர்மனியும் தீவிரவாதத்துக்கு எதிராக ஒற்றுமையாக நிற்கும் என்றும் உலக நாடுகளும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போரிட ஒன்றிணைய வேண்டும் எனவும் அழைப்பு விடுக்கப்பட்டது.

 

Dila

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!