இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

அனைத்து சமூகங்களுக்கும் சமமான சட்டத்துடன் கூடிய நாட்டைக் கட்டியெழுப்புவோம் : ஜனாதிபதி அனுர

திருகோணமலையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, பிரிவினை யுகத்தை முடிவுக்குக் கொண்டு வந்து சமாதானத்தை நிலைநாட்டும் அரசாங்கத்தை அமைக்கும் சிறப்புப் பொறுப்பு திருகோணமலை மாவட்ட மக்களுக்கு உள்ளது என தெரிவித்துள்ளார்.

“சிங்கள, தமிழ், முஸ்லிம் அனைவருக்கும் சமமான சட்டத்துடன் கூடிய ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவோம். இவ்வாறான நகர்வுகளுக்கு இடையூறான சட்டங்களை மாற்றியமைத்து, “நான் இலங்கையன்” என்று அனைவரும் பெருமையுடன் கூறக்கூடிய நாட்டைக் கட்டியெழுப்புவோம்,” என்று வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் வெற்றியின் பின்னர் தேசிய மக்கள் சக்தி (NPP) மீது வடக்கில் உள்ள மக்கள் பாரிய விழிப்புணர்வைக் கொண்டுள்ளனர் என தெரிவித்தார்.

அனைத்து சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களின் ஆசிர்வாதத்துடனும் நம்பிக்கையுடனும் NPP யினால் மாத்திரமே அரசாங்கத்தை அமைக்க முடியும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

சிங்கள, தமிழ், முஸ்லிம் அனைவருக்கும் சமமான சட்டத்துடன் கூடிய நாட்டைக் கட்டியெழுப்ப அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

(Visited 7 times, 1 visits today)

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை