இலங்கை மக்களை அச்சுறுத்தும் தொழுநோய்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் மாத்திரம் 1,084 தொழுநோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தொழுநோய் தடுப்பு பிரிவின் வைத்தியர் நிரூபா பல்லேவத்த தெரிவித்துள்ளார்.
அவர்களில் 68 சதவீதமானோர் மற்றுமொருவருக்குத் தொழுநோயைப் பரப்பக்கூடியவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிகமான தொழுநோயாளர்கள் கொழும்பு மாவட்டத்திலே பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 115 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
(Visited 10 times, 1 visits today)