உலகம் செய்தி

ஹெஸ்புல்லாவுடன் தொடர்புடையவர்கள் 16 பேர் குவைட்டில் அதிரடியாக கைது – லெபனான் கண்டனம்

குவைட்டை இலக்காகக் கொண்ட ஹெஸ்புல்லாவின் சதித்திட்டம் எனக் கூறப்படுவதை லெபனான் வெளியுறவு அமைச்சகம் கடுமையாகக் கண்டித்துள்ளது.

ஹெஸ்புல்லாவுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 14 குவைட் குடிமக்கள் மற்றும் 02 லெபனான் நாட்டினர்கள் உட்பட 16 பேரை கைது செய்துள்ளதாக குவைட் உள்துறை அமைச்சகம் திங்களன்று தெரிவித்துள்ளது.

இந்தக் கைது நடவடிக்கையைத் தொடர்ந்து, லெபனான் வெளியுறவு அமைச்சகம் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள், நாட்டின் பாதுகாப்பை பாதிப்பதற்கும் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கும் திட்டமிட்டிருந்ததாக குவைட் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், அவர்களிடமிருந்து ஆயுதங்கள், கேமரா ட்ரோன்கள் மற்றும் மோர்ஸ் குறியீடு தொடர்பு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!