இலங்கை

மாத்தளைக்கு பேராபத்து!! பாறைகள் விழும் அபாயம்

மாத்தளை மாவட்டத்தில் மண்சரிவு மற்றும் பாறைகள் விழும் அபாயம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதைத் தொடர்ந்து, சுமார் 400 குடும்பங்களுக்கு பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் இன்று புதிதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் மாத்தளை மாவட்டப் பிரிவின் தலைமை புவியியலாளர் சமிந்த மொரேமட இது குறித்துக் கருத்து தெரிவிக்கையில்,

தற்போது ஏற்பட்டுள்ள பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக இன்று காலை நிலவரப்படி, 400 க்கும் மேற்பட்ட அபாயகரமான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மாத்தளை நகரைப் பார்த்தபடி அமைந்திருக்கும் தொடந்தெனிய மலையில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாகவும், பாறைகள் விழும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அம்பொக்க, வுளுகல, ஹுனுகல மற்றும் ராவணகந்த ஆகிய மலைத் தொடர்களில் நிலவியல் மாற்றங்கள் நிகழ்ந்து வருவதாகவும் சமிந்த மொரேமட கூறினார்.

பாதிக்கப்பட்டுள்ள அனைத்துக் குடும்பங்களும் காலம் தாழ்த்தாமல், ஒதுக்கப்பட்ட பாதுகாப்பு மையங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

MP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!