இலங்கை

காணி தகராறு ; தம்பியை கொடூரமாக கொலை செய்த அண்ணன்!

கலஹா, நீலம்ப, யோகலெச்சாமி தோட்டத்தில் காணி தகராறு காரணமாக நேற்று (12) நபர் ஒருவர் தனது இளைய சகோதரனை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.

கிருஷ்ணசாமி கருணாநிதி என்ற 35 வயதுடைய நபரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

இவருடைய சகோதரர் ஏசுதாசன் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார். இவர் சிறையில் இருந்து விடுதலையாகி அனுராதபுரத்தில் தனியாக வசித்து வருகிறார்.இந்நிலையில், கடந்த வியாழன் இரவு தனது தந்தைக்கு சொந்தமான நிலத்தை திருமணமாகாத தம்பி விற்றதாக கூறிவிட்டு கருணாநிதியின் வீட்டுக்கு வந்து தகராறு செய்தார்.

பின்னர் அயலவர்கள் தலையிட்டு மோதலை சமரசம் செய்தனர், ஆனால் அது தோல்வியடைந்தது.இரவு முழுவதும் இடம்பெற்ற தகராறு அதிகாலை 2.00 மணி முதல் அமைதி நிலவியதால் சந்தேகமடைந்த அயலவர்கள், அது தொடர்பில் தேடிய போது கருணாநிதி காயங்களுடன் கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக கிடந்ததுள்ளார்.

தடியடி, கூரிய ஆயுதங்கள், கற்கள் மற்றும் கண்ணாடி போத்தல்களால் அடித்து கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்ணனை தாக்கிவிட்டு தப்பியோடிய ஏசுதாசனை அயலவர்கள் பிடித்து கலஹா பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

(Visited 2 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content