இந்தியா செய்தி

உயிரிழந்த யாசகரின் பையில் லட்சக்கணக்கில் பணம்!

இந்தியா, கேரளாவில் விபத்தில் உயிரிழந்த யாசகர் வைத்திருந்த பையில் இருந்து லட்சக்கணக்கில் பணம் மீட்கப்பட்டுள்ளது.

கேரளா, ஆலப்புழா மாவட்டத்தின் சரும்மூடு பகுதியில் யாசகம் பெற்று வாழ்ந்த அனில் கிஷோர் மீது மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.

இதனால் காயமடைந்த அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், இரவோடு இரவாக வைத்தியசாலையில் இருந்து தப்பியோடியுள்ளார்.

மறுநாள் காலை அவர் வீதியோரம் உயிரிழந்து கிடந்தார். அவரது உடைமைகளை பொலிஸார் பரிசோதித்தனர்.
அதில் ரூபாய் நோட்டுகள் இருந்தன. சரும் மூடு பகுதி பஞ்சாயத்து உறுப்பினர் முன்னிலையில் பணம் எண்ணப்பட்டது.

இந்திய நாணய மதிப்பில் நான்கரை லட்சம் ரூபா பணம் இருந்துள்ளது. சவுதி ரியால்கள் சிலவும் அவரிடம் இருந்தன. அந்தப் பணத்தை பொலிஸார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளனர்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!