இங்கிலாந்தில் உள்ளுராட்சி தேர்தலை தாமதப்படுத்தும் தொழிற்கட்சி – கொந்தளிக்கும் எதிர்கட்சிகள்!
இங்கிலாந்தில் வரும் மே மாதம் நடைபெறவுள்ள உள்ளுராட்சி தேர்தலை தாமதப்படுத்துமாறு 29 கவுன்சில்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இதில் தொழிற்கட்சி தலைமையிலான அதிகாரிகள் பெரும்பான்மையாக உள்ளனர்.
உள்ளாட்சி மறுசீரமைப்புக்கான (LGR) வளங்கள் பற்றாக்குறை மற்றும் தேர்தல்களை நடத்துவதற்கான செலவு ஆகியவற்றை கருத்தில் கொண்டே தேர்தலை தாமதப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இருப்பினும் கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்கள். லிபரல் டெமாக்ரட்டுகள் மற்றும் ரிஃபார்ம் யுகே (Reform UK) உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தாமதங்களை கடுமையாக விமர்சித்துள்ளன.
தொழிற்கட்சி வாக்காளர்களைத் தவிர்ப்பதாகவும் ஜனநாயகத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளன.
ரிஃபார்ம் யுகே (Reform UK) கட்சி தலைவர் நைகல் ஃபரேஜ் (Nigel Farage), தொழிற்கட்சி அரசாங்கத்தின் நடவடிக்கையை “அதிகார துஷ்பிரயோகம்” என்று குற்றம் சாட்டி, தாமதங்களை சவால் செய்ய நீதித்துறை மறுஆய்வைத் தொடங்கியுள்ளார்.
இதேவேளை தேர்தல் ஆணையத்தின் தலைமை நிர்வாகி விஜய் ரங்கராஜன் (Vijay Rangarajan) ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுபோன்ற தாமதங்கள் “முன்னோடியில்லாத” நிச்சயமற்ற தன்மையை உருவாக்குவதாகவும், பொதுமக்களின் நம்பிக்கையை சேதப்படுத்தும் அபாயம் இருப்பதாகவும் விமர்சித்துள்ளார்.





