குவைட் மற்றும் கட்டாரின் உயர்மட்ட இராஜதந்திரிகள் அவசர கலந்துரையாடல்
பிராந்தியத்தில் அதிகரித்து வரும் இராணுவ பதற்றங்கள்’ குறித்து குவைட் மற்றும் கட்டாரின் உயர்மட்ட இராஜதந்திரிகள் கலந்துரையாடியுள்ளனர்.
குவைட்டின் வெளியுறவு அமைச்சகம் சமூக ஊடகங்களில் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவைட் வெளியுறவு அமைச்சரும் கட்டார் பிரதமரும் தொலைபேசியில் உரையாடியதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பிராந்திய நாடுகளுக்கு எதிரான ஈரானின் கண்டிக்கத்தக்க ஆக்கிரமிப்பின் விளைவாக, அதிகரித்து வரும் இராணுவ பதற்றங்கள், சர்வதேச மட்டங்களில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு ஏற்படுத்தும் கடுமையான விளைவுகள் குறித்து இரு தலைவர்கள் இடையே கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஷேக் அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யானுடனும் அல்-சபா இதேபோன்ற உரையாடலை மேற்கொண்ணடாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.





