இலங்கை

குருந்தூர் மலை விவகாரம் : பிரிவினைவாத மோதல் ஏற்படும் என எச்சரிக்கை!

முல்லைத்தீவு குறுந்தூர்  பௌத்த விகாரையை தமிழ் இந்து கோவிலாக மாற்றும் முயற்சி இடம்பெற்று வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர்  ஜெயந்த சமரவீர குறிப்பிடுகின்றார்.

இந்த பிரச்சனையால் மதவாத, இனவாத, பிரிவினைவாத மோதல் உருவாகலாம் என இந்திய புலனாய்வு அமைப்புகள் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

தொல்பொருள் திணைக்களம் தனது பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்றாமையே இதற்குக் காரணம் என பாராளுமன்ற உறுப்பினர் குற்றம் சுமத்தியுள்ளார்.

தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் இலங்கையின் தொல்பொருள் பாரம்பரியத்தின் பாதுகாவலராக இருக்கும் போதே இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பௌத்த விகாரையை இந்து தமிழ் ஆலயமாக மாற்றும் நடவடிக்கை அமுற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர்,  இந்நிலைமைக்கு தொல்பொருள் திணைக்களமே பொறுப்பு எனவும், தொல்பொருட்கள் கட்டளைச் சட்டத்தை மீறுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!