பாரிஸ் மெட்ரோ நிலையத்தில் கத்தி குத்து தாக்குதல் – 3 பெண்கள் காயம், சந்தேக நபர் கைது
பிரான்ஸ்(France) தலைநகர் பாரிஸ்(Paris) மெட்ரோவில் நடந்த கத்தி குத்து தாக்குதலில் மூன்று பெண்கள் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், சம்பவத்தை தொடர்ந்து குற்றவாளியை கைது செய்துள்ளதாக பிரெஞ்சு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மத்திய பாரிஸின் குறுக்கே செல்லும் லைன் 3 மெட்ரோ பாதையில் மூன்று வெவ்வேறு இடங்களில் பாதிக்கப்பட்ட மூன்று பேரும் தாக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து சேவை தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல்கள் மாலை 4:15 முதல் மாலை 4:45 மணி வரை மரைஸ்(Marais) மாவட்டத்திற்கு அடுத்துள்ள ரிபப்ளிக்(Republique), ஆர்ட்ஸ் எட் மெட்டியர்ஸ்(Arts et Métiers) மற்றும் ஓபரா (Opera) ஆகிய நிலையங்களில் இடம்பெற்றுள்ளது.





