ஐரோப்பா

ரஷ்யாவுக்குள் புகுந்து ட்ரோன் தாக்குதல் … பற்றி எரியும் கிளின்ட்சி நகர் எண்ணெய் சேமிப்பு கிடங்கு

உக்ரைன் மீது ரஷ்யா முழு அளவிலான ராணுவ நடவடிக்கையை தொடங்கி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் நிறைவடைய உள்ளன. எனினும் போர் முடிவுக்கு வருவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை.

ஆரம்பத்தில் ரஷ்ய படைகளின் தாக்குதலை சமாளித்து தற்காப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட உக்ரைன் படைகள், பின்னர் எதிர்தாக்குதலை தீவிரப்படுத்தின. சமீப காலமாக ரஷ்யாவுக்குள் புகுந்து தாக்குதல் நடத்துகின்றன. இந்த ஆண்டு ரஷ்ய எல்லைப் பகுதிகளுக்குள் அதிக இலக்குகளைத் தாக்கப்போவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியிருந்தார்.அதனை உறுதி செய்யும் வகையில், மேற்கு ரஷ்யாவில் எண்ணெய் சேமிப்பு கிடங்கை குறிவைத்து உக்ரைன் படை இன்று டிரோன் தாக்குதல் நடத்தியிருக்கிறது. இந்த தாக்குதல் காரணமாக எண்ணெய் சேமிப்பு கிடங்கு பற்றி எரிகிறது.

உக்ரைன் எல்லையில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிளின்ட்சி நகரில் இந்த எண்ணெய் சேமிப்பு கிடங்கு உள்ளது. டிரோன் தாக்குதலில் 6,000 கன மீட்டர் கொள்ளளவு கொண்ட 4 ராட்சத டேங்குகளில் உள்ள எரிபொருள் தீப்பிடித்து எரிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கிளின்ட்சியில் பறந்து வந்த உக்ரைனின் டிரோனை, ரஷ்யாவின் வான் பாதுகாப்பு அமைப்பு செயலிழக்க செய்து வீழ்த்தியதாகவும், ஆனால் அதற்குள் ட்ரோனில் இருந்து வெடிகுண்டு வெளியேறி எண்ணெய் சேமிப்பு கிடங்கில் விழுந்து வெடித்ததாகவும் பிரையன்ஸ்க் பிராந்திய ஆளுநர் கூறியுள்ளார். இந்த தாக்குதலில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.இதேபோல் உக்ரைன் டிரோன்கள் மாஸ்கோவிற்கு தெற்கே 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தம்போவின் கன் பவுடர் ஆலையையும் தாக்கியதாக உக்ரைன் தேசிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.ஆனால் இந்த தாக்குதலில் ஆலைக்கு பாதிப்பு இல்லை என்றும், ஆலை வழக்கம்போல் செயல்படுவதாகவும் தம்போவ் ஆளுநர் கூறியுள்ளார்.

தற்போது ரஷ்யாவின் வான் பாதுகாப்பு அமைப்புகள் உக்ரைனின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த சூழலில் உக்ரைன் படைகள் நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய டிரோன்கள் மூலம், ரஷ்யாவிற்குள் உள்ள தொலைதூர இலக்குகளை குறிவைக்கின்றன.

(Visited 5 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!