இலங்கை

இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு மன்னர் மூன்றாம் சார்ள்ஸ் அனுப்பிய வாழ்த்து செய்தி!

இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுரகுமார திஸாநாயக்கவிற்கு பிரித்தானியாவின் மன்னர் மூன்றாம் சார்ள்ஸ் தனது வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், இந்த முக்கியமான தருணத்தில் இலங்கைக்கு வழிகாட்டுவதில் சாத்தியமான அனைத்து வெற்றிகளையும் வாழ்த்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

புதிய ஜனாதிபதியின் கீழ் இங்கிலாந்துக்கும் இலங்கைக்கும் இடையில் ஏற்கனவே உள்ள நெருங்கிய உறவு மேலும் ஆழமடைவதை காண்போம் என மன்னர் சார்ள்ஸ் நம்பிக்கை தெரிவித்தார்.

“C.O.P.29 நெருங்கி வருவதால், நமது சமுத்திரங்களைப் பாதுகாக்கவும், பல்லுயிர்களைப் பாதுகாக்கவும், காலநிலை அபாயங்களைச் சமாளிக்கவும், நமது நாடுகள் கூட்டாளிகளாகவும், நவீன காமன்வெல்த் உறுப்பினர்களாகவும் இணைந்து செயல்பட முடியும் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பெட்ரிக் அவர்களினால் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் கையளிக்கப்பட்ட கடிதத்தில் சார்ள்ஸ் மன்னரின் செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 24 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!