ஐரோப்பா செய்தி

பிரித்தானிய மன்னருக்கு புற்றுநோய்!! வெளியான அதிர்ச்சி தகவல்

பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் புற்றுநோய்க்கு சிகிச்சைபெற்று வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள  அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணி இரண்டாம் எலிசபெத் மறைவையடுத்து அவரது மகன் சார்லஸ் பிரித்தானிய  மன்னராக கடந்த 2022ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு பின் முறைப்படி மன்னர் மூன்றாம் சார்லஸாக முடிசூட்டிக்கொண்டார்.

இவர் புராஸ்டேட் சுரப்பி வீக்கம் அறுவை சிகிச்சைக்காக கடந்த சில தினங்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகின.

எவ்வாறாயினும் அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக இன்று வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதற்கான சிகிச்சைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 23 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!