இலங்கை செய்தி

தேசிய ரீதியில் சாதனை படைத்த கிளிநொச்சி சிவநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவிகள்

17 வயதிற்குட்பட்ட பெண்கள் கபடி அணியினர் இம்முறை நடைபெற்ற தேசிய ரீதியிலான கபடி போட்டியில் முதலாம் இடத்தை பெற்று சாதனையை நிலை நாட்டினர்.

இரண்டாவது வருடமாகவும் தொடர்ந்து முதல் நிலையை இப்பாடசாலை தக்கவைத்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

இச் சாதனையை கௌரவிக்குமுகமாக இன்றைய தினம் (28) கிளிநொச்சி மாவட்டத்தில் மிகவும் பிரபல்யமான ஸ்ரீ ராம் நகை கடையின் உரிமையாளர் சாதனை புரிந்த அனைத்து வீராங்கனைகளையும் கௌரவித்தார்.

இந்நிகழ்வில் பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் கடையின் உரிமையாளர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

(Visited 7 times, 1 visits today)

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை