மத்திய கிழக்கு

இஸ்ரேலிலிருந்து கடத்தப்பட்ட தாயும் மகளும் விடுவிப்பு

ஹமாஸ் கிளர்ச்சிக் குழு இஸ்ரேலிலிருந்து கடத்திய அமெரிக்காவைச் சேர்ந்த தாயையும் மகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2 வாரங்களுக்கு முன்னர் இஸ்ரேல் மீது திடீர்த் தாக்குதல் நடத்தியபோது ஹமாஸால் கடத்தப்பட்ட சுமார் 200 பேரில் அவர்களும் அடங்குவர்.

அவர்கள் ஹமாஸால் விடுவிக்கப்பட்ட முதல் 2 பிணையாளிகள். அந்தத் தாயும் – மகளும் பின்னேரம் இஸ்ரேலுக்குத் திரும்பினர். அவர்களது உடல்நிலை குறித்துத் தகவல் வெளியிடப்படவில்லை.

அவர்கள் விடுவிக்கப்பட்ட செய்தி மகிழ்ச்சியளிப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Bide) தெரிவித்தார். அந்த 2 பெண்களிடமும் திரு. பைடன் தொலைபேசியில் உரையாடினார்.

இஸ்ரேலுக்கு விடுமுறைக்குச் சென்றிருந்த அவர்கள் தாக்குதல் நடந்த நாளன்று (7 அக்டோபர்) ஹமாஸ் கிளர்ச்சிக் குழுவால் கடத்தப்பட்டனர்.

கத்தாரும் எகிப்தும் கேட்டுக்கொண்டதை அடுத்து அவர்கள் இருவரும் மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்கப்பட்டதாக ஹமாஸ் கூறியது.

(Visited 6 times, 1 visits today)

SR

About Author

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.
error: Content is protected !!