இலங்கை

வவுனியாவில் ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளான கெப் வண்டி

வவுனியா ஓமந்தை பகுதியில் பாதுகாப்பற்ற ரயில் கடவையில் கெப் வண்டி ஒன்று, ரயிலுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த கெப் வண்டியின் சாரதி சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த இடத்தில் இதற்கு முன்பும் விபத்துகள் நடந்துள்ளதாகவும், முறையான ரயில்வே கடவை காவலர்கள் இல்லாததால் விபத்துகள் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இன்று காலை அனுராதபுரத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரயிலுடன் இந்த கெப் வண்டி மோதியுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 8 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்