இலங்கை செய்தி

களனி பல்கலைக்கழக மாணவன் மரணம் – விசாரணையில் வெளிவந்த தகவல்

களனி பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதியின் நான்காம் மாடியிலிருந்து வீழ்ந்து உயிரிழந்த மாணவனின் மரணம் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளது.

குறித்த மாணவனின் பிரேதப் பரிசோதனை இன்று இராகமை போதனா வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளது.

குறித்த மாணவன் உயிரிழந்த இடத்தை சட்ட வைத்திய அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர் இந்த சம்பவம் தொடர்பில் 21 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், உயிரிழந்த மாணவன் தமது பல்கலைக்கழக நண்பர்களுடன் மது அருந்தியமை ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படி, குறித்த மாணவன் மதுபோதையிலிருந்த போது விடுதியின் 4ஆவது மாடியில் உள்ள யன்னலின் ஊடாக தவறி வீழ்ந்து உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

ரிதிமாலியத்த பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

(Visited 14 times, 14 visits today)
See also  மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் தொடர்பில் முக்கிய தீர்மானம்
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content