களனி பல்கலைக்கழ மாணவர் திடீரென உயிரிழப்பு!

களனி பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டதாக நேற்றிரவு (07.09 ) அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மாணவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக கிரிபத்கொட பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் களனி பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் மூன்றாம் ஆண்டில் கல்வி கற்கும் 22 வயதுடைய அகில இந்திரசேன என்ற மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
(Visited 10 times, 1 visits today)