இலங்கை

கந்தளாய் : சதுரங்க சுற்றுப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு குவியும் பாராட்டு

பாடசாலைகள் சதுரங்க சங்கத்தினால் பாடசாலைகளுக்கு இடையில் 7 பேர் கொண்ட குழுக்கள் முறையில் கந்தளாய் மத்திய கல்லூரியில் நடாத்தப்பட்ட சதுரங்க சுற்றுப் போட்டியில் மாகாண மட்டடத்தில் (03) தி/இ.கி.ச கோணேஸ்வரா இந்துக்கல்லூரி வெற்றியீட்டியுள்ளது.

11 வயது மற்றும் 13 வயது மாணவர்கள் பங்குபற்றிய போட்டிகளில் 2 ஆம் இடத்தையும் 09 வயது மற்றும் 17 வயது மாணவர்கள் 3 ஆம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் 15 வயது மாணவர்கள் கலந்து கொண்டு 5 ஆம் இடத்தையும் பெற்று அகில இலங்கை ரீதியாக நடைபெற உள்ள போட்டிகளில் கலந்துகொள்ள தகுதி பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

மேலும் குறித்த மாணவர்களை தெரிவு செய்து பயிற்சியளித்து போட்டிகளுக்கு ஒழுங்குபடுத்தி கால நேரம் பாராது அவர்களுடன் பாடுபட்டு அயராது உழைத்து வெற்றிப்பாதைக்கு இட்டுச்சென்ற விளையாட்டுத்துறை ஆசிரியர் திரு. சுபைடீன் அவர்களுக்கு பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றனர்.

 

 

 

 

 

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!