கடுகண்ணாவ நிலச்சரிவு : பலி எண்ணிக்கை ஆறாக உயர்வு!
கண்டி – கடுகண்ணாவ ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 06 ஆக அதிகரித்துள்ளது.
முன்னதாக நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
இந்த சம்பவத்தில் காயமடைந்த குறைந்தது நான்கு பேர் மருத்துவமனையில் உள்ளனர்.
இடிபாடுகளுக்கு அடியில் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம் என்ற அச்சத்தின் மத்தியில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்கின்றன என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
(Visited 3 times, 3 visits today)




