இந்தியா

கச்சத்தீவு இலங்கை அரசிடம் இருந்து மீட்கப்படும்! மு.கா.ஸ்டாலின்

கச்சத்தீவு இலங்கை அரசில் இருந்து மீட்டு தமிழக மீனவர்களின் உரிமை நிலைநாட்டப்படும் என தமிழக முதல்வர் மு.கா.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் கேம் அருகே இன்று நடைபெற்ற மீனவர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு (18) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை, 5000-ல் இருந்து ₹8000-ஆக உயர்த்தப்படும் எனவும், 1076 கி.மீ. நீளமான கடற்கரையை கொண்ட மாநிலம் நம் தமிழ்நாடு. வகை வகையாக கடலில் கலம் செலுத்தியவர்கள் தமிழர்கள். தமிழ்நாட்டை உலகத்தோடு இணைத்தது கடல்; கடல் ஆழமானது மட்டுமல்ல, வளமானது. மீன்பிடி தொழிலில் 5-வது பெரிய மாநிலம் தமிழ்நாடு உள்ளது.

மீனவர் நலனுக்காக திமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன கடந்த 2 ஆண்டுகளில் மீனவர்கள் நலனுக்காக ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். மீன்வளத்துறை பெயரை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையாக மாற்றினோம், மீன்பிடி தடைக்கால நிவாரணமாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.5,000 வழங்கப்படுகிறது; இனியது உயர்த்தப்பட்டு 8000 ரூபாயாக வழங்கப்படும்.

45,000 மீனவர்களுக்கு கூட்டுறவு கடன் வழங்கப்படும்,மீனவர்களுக்கான வீடு கட்டும் திட்டத்தில் 5,035 வீடுகளுக்கு பட்டா வழங்கப்படும்,தங்கச்சிமடத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்க ஆய்வு மேற்கொள்ளப்படு, தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்ட நாட்டுப்படகு மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் 3,400 லிட்டரிலிருந்து 3, 700 லிட்டராக அதிகரிப்பு,விசைப்படகுகளுக்கு மானிய டீசல் 18,000ல் இருந்து 19,000 லிட்டராக அதிகரித்து வழங்கப்படும்.

நாட்டுப்படகு மீனவர்களுக்கு மானிய டீசல் 4,000ல் இருந்து 4,400 லிட்டராக உயர்த்தி வழங்கப்படும்.

தமிழ்நாடு மீன்வள பல்கலையில் மீனவர் குடும்ப மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு 5-ல் இருந்து 20 விழுக்காடாக உயர்த்தி உள்ளோம். கடல் அரிப்பை தடுக்க, படகுகளை பாதுகாக்க தூண்டில் வளைவுகள் அமைத்துக் கொடுத்துள்ளோம். 14 கடலோர மாவட்டங்களை சேர்ந்த 2.07 லட்சம் மீனவர்களுக்கு ரூ.62 கோடி நிவாரணம் வழங்கப்படும். 2.07 லட்சம் மீனவர்களுக்கு மாநில அரசின் பங்களிப்பாக 62.19 கோடி வழங்கப்பட்டுள்ளது.

மீனவ சமுதாய மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி ,குடிமைப்பணி தேர்வுக்காக மீனவ சமுதாய மாணவர்களுக்கு 6 மாத சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

குடிமைப்பணி தேர்வுக்கான பயிற்சி திட்டத்தில் 41 மீனவ சமுதாய மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர்.

மீனவர்களுக்கு அளித்த வாக்குறுதியை பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றவில்லை.

பாஜக ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகளில், தமிழக மீனவர்களின் மீது இலங்கை கடற்படையின் தாக்குதல் தொடர்கிறது.

மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண பாஜக அரசு என்ன செய்துள்ளது தமிழக முதல்வர் கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்த நிலையில் பத்து சிறப்பு திட்டங்களை மீனவர் மாநாட்டில் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார் அதில் 14 ஃபைனலுக்கு 88 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்டங்கள் வழங்கப்பட உள்ளது.

மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை 5000 இருந்து 8000 ஆக வழங்கப்படும். 60 வயதுக்கு மேற்பட்ட வயதான மீனவர்களுக்கு நிவாரண தொகை மீன்பிடி தர காலத்தில் வழங்கப்படும் .வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்து கச்சத்தீவு இலங்கை அரசில் இருந்து மீட்டு தமிழக மீனவர்களின் உரிமையை நிலைநாட்டப்படும் என பத்து சிறப்பு திட்டங்களை தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

இதை எடுத்து மீனவர்கள் முதல்வரின் அறிவிப்பை வரவேற்பதோடு மீனவர் சமுதாயத்தை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இந்நிகழ்வில் தமிழக அமைச்சர்கள், அரசு துறை அதிகாரிகள் மற்றும் தமிழகத்தின் கடலோரப் பகுதியிலான 14 மாவட்டங்களில் இருந்து பல ஆயிரக்கணக்கான மீனவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் தமிழக முதல்வர் வருகைக்காக தென்மண்டல ஐஜி நரேந்திர நாயர் தலைமையில் 1500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 

(Visited 6 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே

You cannot copy content of this page

Skip to content