ஐரோப்பா

துருக்கியில் இறுதியாக வென்ற நீதி : 09 ரயில் அதிகாரிகளுக்கு 108 ஆண்டுகள் சிறை தண்டனை!

துருக்கியில் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு 25 பேரைக் கொன்ற விபத்து தொடர்பாக ஒன்பது ரயில் அதிகாரிகளுக்கு 108 ஆண்டுகளுக்கும் மேலான சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

துருக்கிய மாநில இரயில்வேயால் இயக்கப்படும் பயணிகள் ரயில் ஜூலை 2018 இல் இஸ்தான்புல்லுக்கு மேற்கே 110 கிலோமீட்டர் (68 மைல்) தொலைவில் உள்ள கோர்லு மாவட்டம் வழியாகச் சென்றபோது தடம் புரண்டது.

இதில் 07 குழந்தைகள் உள்பட 25 பேர் உயிரிழந்தனர். 300இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

இந்நிலையில் விபத்து தொடர்பில் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதுடன், குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில் கனமழை காரணமாக ஒரு ரயில் தடுப்பணை இடிந்து விழுந்ததாகவும், கடுமையான வானிலைக்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததற்காக ரயில்வே நடத்துனர்கள் தவறிழைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்தே மேற்படி தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், “உயர்நிலை அதிகாரிகளை விசாரணைக்கு உட்படுத்தாவிட்டால் வழக்கு முடிவுக்கு வராது” என்று கூறியுள்ளனர்.

(Visited 6 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!