இலங்கை

பொலிஸாரின் நீதி நடவடிக்கை : 24 மணி நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது!

இன்று (05) அதிகாலை முடிவடைந்த 24 மணிநேர நீதி நடவடிக்கையின் போது பல்வேறு குற்றங்களுக்காக 1184 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

337 கிராம் 758 மில்லிகிராம் ஹெரோயின், 242 கிராம் 372 மில்லிகிராம் ஐஸ், 06 கிலோகிராம் கஞ்சா, 7,772 கஞ்சா செடிகள், 03 கிலோகிராம் 694 கிராம் மாவா, 55 கிராம் ஹாஷிஸ்,
1,221 மாத்திரைகள் மற்றும் 1 கிலோ 226 கிராம் குஷ் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட 1184 சந்தேக நபர்களில் 59 சந்தேகநபர்கள் தடுப்புக் காவல் உத்தரவின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

23 சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டவிரோத சொத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. போதைப்பொருளுக்கு அடிமையான 49 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் விசேட பணியகத்தின் பதிவு செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பட்டியலில் இருந்த 93 சந்தேக நபர்கள் இன்றைய நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

(Visited 4 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content