இலங்கை

இலங்கை பொலிஸாரின் நீதி நடவடிக்கை : ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது!

கடந்த 24 மணித்தியாலங்களில்,  நீதி நடவடிக்கையின் மூலம் 1534 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இவர்களில் 23 பேரின் சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் 99 பேர் மறுவாழ்வுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர் என பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்களை கைதுசெய்வதற்காக பொலிஸாரால் அமுல்படுத்தப்படும் நீதி நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று முதல் 03 நாட்களுக்கு இந்த நடவடிக்கை அமுல்படுத்தப்பட மாட்டாது என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பண்டிகைக் காலங்களில் விசேட கடமைகளுக்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட வேண்டியிருப்பதால் இந்த நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.

(Visited 13 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!