இலங்கை செய்தி

ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் காலமானார்!

இலங்கையில் நடந்த போரின்போது களமுனைச் செய்திகளை விவரணங்களாக எழுதிய, சர்வதேச புகழ்பெற்ற சிரேஷ்ட ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் இன்று (13) காலமானார்.

இறக்கும்போது அவருக்கு 81 வயது என்பதுடன், அவர் சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று காலை 9.00 மணி முதல் தெஹிவளை அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைக்கப்படவுள்ளது.

இறுதிச் சடங்குகள் இன்று (13) பிற்பகல் தெஹிவளை பெரிய பள்ளிவாசல் மையவாடியில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ஊடகங்களிலும் இவர் பணியாற்றியுள்ளார். இலங்கையில் பாதுகாப்பு துறை செய்திகள், புலனாய்வு செய்திகள் என்பவற்றை துணிந்து எழுதக்கூடிய துணிக்கச்மிக்க ஊடகவியலாளராக அவர் செயல்பட்டார்.

 

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!