செய்தி

அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளில் கூட்டு பயிற்சி – கிம்மின் சகோதரி எச்சரிக்கை!

அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் கூட்டு இராணுவப் பயிற்சிகள் தங்களுக்கு “எதிர்மறையான விளைவுகளை” ஏற்படுத்தக்கூடும்  என வடகொரிய தலைவரின் சகோதரியான கிம் யோ ஜாங் எச்சரித்துள்ளார்.

தென் கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகியவை செப்டம்பர் 15 ஆம் திகதி தொடங்கி “ஃப்ரீடம் எட்ஜ்” எனப்படும் வருடாந்திர தற்காப்புப் பயிற்சிகளை நடத்தவுள்ளன.

வட கொரியாவின் அணுசக்தி மற்றும் ஏவுகணை அச்சுறுத்தல்களுக்கு எதிராக வான்வழி, கடற்படை மற்றும் சைபர் செயல்பாட்டுத் திறன்களை மேம்படுத்தும் வகையில் குறித்த பயிற்சிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கிம்மின் சகோதரியான கிம் யோ ஜாங், அதாவது கொரிய ஜனநாயக மக்கள் குடியரசைச் சுற்றி காட்டும் பொறுப்பற்ற சக்தியின் காட்சி, சந்தேகத்திற்கு இடமின்றி தங்களுக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

(Visited 3 times, 1 visits today)

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி