அமெரிக்காவில் வேலையின்றி தவித்த கணவன் : மனைவி மற்றும் மகன் சுட்டுக்கொலை!

அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலத்தில் நபர் ஒருவர் தனது மனைவி மற்றும் இளம் மகனை சுட்டுக் கொன்றுவிட்டு தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
கேட்டியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் அடையாளம் தெரியாத நபர் தனது சுமார் 43 வயது மனைவி மற்றும் 7 வயது மகனைக் கொன்றதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
சிறுவனின் படுக்கையறையில் தாயும் மகனும் இறந்து கிடந்தனர். குழந்தை இன்னும் படுக்கையில் கிடந்ததாக போலீசார் தெரிவித்தனர். சம்பவ இடத்தில் ஒரு துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டது.
தாக்குதல்தாரி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்த தம்பதியினரின் 19 வயது மகளும் அவரது காதலனும் அடுக்குமாடி குடியிருப்பின் மற்றொரு அறையில் தூங்கிக் கொண்டிருந்ததால் அவர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
வேலையில்லாத அந்த நபர் மனநலப் பிரச்சினைகளை அனுபவித்து வந்ததாகவும், மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெற்று வந்திருக்கலாம் என்றும் குடும்ப உறுப்பினர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.