ஐரோப்பா

இத்தாலியில் வேலை வாய்ப்புகள்? தொலைபேசி மோசடி குறித்து மக்களுக்கு எச்சரிக்கை

இத்தாலியில் வேலை வாய்ப்புகளை வழங்குவதாக நடித்து வேலை தேடுபவர்களை குறிவைத்து புதிய தொலைபேசி மோசடி ஒன்று நடந்து வருகின்றது.

இந்த மோசடியில் ஜெர்மனி உட்பட பல நாடுகளைச் சேர்ந்த பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மோசடி செய்பவர்கள் இத்தாலிய எண்களில் இருந்து அழைத்து, பாதிக்கப்பட்டவரின் சுயவிவரக்கோவை அதாவது CVஐ பெற்றதாக தானியங்கி செய்தி மூலம் கூறுகின்றனர்.

இதனையடுத்து, வேலை தேடுபவரிடம் வட்ஸ்அப்பில் உரையாடலைத் தொடரச் சொல்கிறார்கள். இது ஆபத்தான ஒரு பொறியாகும். இந்த எண்களை வட்ஸ்அப்பில் சேர்க்க வேண்டாம் என சவுத் டைரோல் நுகர்வோர் பாதுகாப்பு மையம் எச்சரித்துள்ளது.

அவ்வாறு செய்வது தரவு திருட்டு, வைரஸ்கள் அல்லது நிதி மோசடிகளுக்கு வழிவகுக்கும். முறையான முதலாளிகள் தானியங்கி அழைப்புகள் அல்லது WhatsApp செய்திகள் மூலம் வேலை வாய்ப்புகளை வழங்குவதில்லை.

வேலை தேடுபவர்கள், வட்ஸ்அப்பில் உரையாட தொடங்கியவுடன் மோசடி செய்பவர்கள் அதிக ஊதியம் பெறும் ஒன்லைன் வேலைகளை வழங்கும் வேலை ஏஜென்சி போல தம்மை காட்டிக்கொள்கின்றனர்.

அதன் பின்னர், அவர்கள் போலி வேலை படிவங்களுக்கான இணைப்புகள் அதாவது Linkகளை அனுப்புகிறார்கள். இதுபோன்ற Linkகளை click செய்வதன் மூலம் போலி வர்த்தக தளங்களுக்கு பணம் பரிமாற்றப்படுகின்றது.

மோசடி செய்பவர்கள் உடனடியாக பணம் கேட்காததால், வேலை தேடுபவர்கள் முதலில் அவர்களை நம்பலாம், இது மோசடியை இன்னும் இலகுவாக்குகின்றது.

பாதுகாப்பாக இருக்க, WhatsApp மூலம் சந்தேகத்திற்கிடமான வேலை வாய்ப்புகளுக்கு ஒருபோதும் பதிலளிக்க வேண்டாம். நீங்கள் அத்தகைய அழைப்பைப் பெற்றால், அதைப் புறக்கணிக்கவும், தனிப்பட்ட விவரங்களைப் பகிர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

(Visited 8 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்