செய்தி விளையாட்டு

ஜஸ்பிரித் பும்ராவுக்கு காயம்? 3வது டெஸ்டில் விளையாடுவது சந்தேகம்

ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் தற்போது 1-1 என சமநிலையில் உள்ளது. இதனால் பிரிஸ்பேனில் நடைபெறும் 3வது டெஸ்ட் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்காக இந்திய அணியின் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா பயிற்சியில் ஈடுபடவில்லை.

பணிச்சுமையை கருத்தில் கொண்டு பும்ராவிற்கு பயிற்சியாளர்கள் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகமும் எழுகிறது.

மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் 14 ஆம் தேதி கப்பாவில் நடைபெற உள்ளது. இதற்காக இந்திய அணி பிரிஸ்பேனுக்கு செல்ல தயாராக உள்ளது.

விராட் கோலி, ரோஹித் சர்மா, ரிஷப் பந்த், ஷுப்மான் கில்,யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் 3வது டெஸ்ட் போட்டிக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பிங்க்-பால் டெஸ்டில், இந்திய அணி 2 இன்னிங்ஸிலும் சேர்த்து மொத்தம் 81 ஓவர்கள் மட்டுமே பேட் செய்தது. மேலும் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

 

(Visited 53 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!