ஜனாதிபதி தேர்தல் களத்தில் இறங்கும் ஜானக ரத்நாயக்க!! பிரதான அலுவலகம் திறப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜானக ரத்நாயக்கவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்துவதற்காக தேசிய சிவில் அமைப்பு முன்னணியின் பிரதான தேர்தல் செயற்பாட்டு மையம் திறக்கப்பட்டுள்ளது.
ஜானக ரத்நாயக்க தலைமையில் சோமாதேவி பிளேஸ், கிருலப்பன அவென்யூ, டிரில்லியன் கட்டிடத்தில் இந்த அலுவலகம் திறக்கப்படவுள்ளதாக தேசிய சிவில் அமைப்பு முன்னணியின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க தெரிவித்தார்.
வலுவான தேசிய பொருளாதாரம் – ஊழலற்ற நாடு என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய வேலைத்திட்டத்தில் இணைய பலர் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தம்மிமிக தெரிவித்தார்.
(Visited 11 times, 1 visits today)