செய்தி பொழுதுபோக்கு

ஜனநாயகன்’ திரைப்பட வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு

நடிகர் விஜய் அரசியலுக்கு வரும் முன் நடித்துள்ள அவரது இறுதித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்குவது தொடர்பான வழக்கின் தீர்ப்பைச் சென்னை உயர்நீதிமன்றம் திகதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.

சுமார் 500 கோடி ரூபாய் செலவில் உருவான இந்தப் படத்தை ஜனவரி 9-ஆம் திகதி வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தணிக்கை சபை இறுதி நேரத்தில் சான்றிதழ் வழங்க மறுத்ததால் இந்தச் சட்டச் சிக்கல் உருவானது.

தணிக்கை சபையின் ஆய்வுக்குழு முதலில் அனுமதி அளித்துவிட்டு, பின்னர் மர்மமான முறையில் வந்த புகார்களைக் காரணம் காட்டி படத்தை மறுஆயுவுக் குழுவிற்கு அனுப்பியது.

இதனையடுத்து. தணிக்கை சபையின் இழுபறியை எதிர்த்துத் தயாரிப்பாளர் தரப்பு சென்னை மேல் நீதிமன்றத்தை அணுகினர். வழக்கை விசாரித்த தனி நீதிபதி, படத்திற்கு உடனே ‘U/A’சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார்.

இதை எதிர்த்துத் தணிக்கை சபை மேல்முறையீடு செய்த நிலையில் தனி நீதிபதியின் உத்தரவுக்கு நீதிபதிகள் ஆயம் தடை விதித்தது.

இந்தநிலையில, தயாரிப்பு நிறுவனம் இந்திய உயர்நீதிமன்றில் இதனை எதிர்த்து மேன்முறையீடு செய்தது.

அதன்படி, உயர் நீதிமன்றம் இந்த வழக்கை ஜனவரி 20 ஆம் திகதிக்குள் (இன்று) விசாரித்து முடிக்குமாறு சென்னை மேல் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.

இதன் விளைவாகவே இன்று இறுதி வாதங்கள் நடைபெற்று, தற்போது தீர்ப்பு திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது

Puvan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!