இலங்கை

பரதநாட்டியம் குறித்து மௌலவியின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு ஜம்இய்யதுல் உலமா சபை கண்டனம்!

இஸ்லாமியா மௌலவி ஒருவர் பரதநாட்டியம் தொடர்பில் தவறாக பேசிய விடயம் தற்பொழுது சமூகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை மேற்கொண்டுள்ள தீர்மானத்தை அறிவிக்க இன்று  (22)   ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

குறித்த ஊடக சந்திப்பில், மௌலவியின் கருத்திற்கு ஜம்இய்யதுல் உலமா சபை கண்டனம் வெளியிட்டுள்ளது.

மதங்கள் மற்றும் கலாசார விடயங்கள் நிந்திக்கப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது.எனவே இதனை வன்மையாகக்கண்டிப்பதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் குறித்த சர்ச்சைக்குரிய கருத்து இந்து மக்கள் மத்தியில் பாரிய அதிருப்தியை ஏற்படுத்தியது. இதற்கு நாம் எமது கவலையையும், கண்டனத்தையும் தெரிவிக்கிறோம் என்றும், தவறை உணர்ந்து அதற்கான நடவடிக்கை எடுத்துள்ள உலமா சபைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 8 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!