சிறுமியை முத்தமிட்ட நபருக்கு சிறை தண்டனை
![](https://iftamil.com/wp-content/uploads/2023/06/jail-jpg.webp)
ஏழு வயது சிறுமியை புதருக்கு அழைத்துச் சென்று முத்தமிட்ட குற்றவாளிக்கு இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், தண்டனையை ஐந்தாண்டுகளுக்கு நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த நபருக்கு 25,000 ரூபா அபராதம் விதித்த நீதிபதி, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 50,000 ரூபா நட்டஈடு வழங்குமாறும் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குற்றவாளி 43 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை ஆவார்.
சம்பவத்தின் போது, குற்றம் சாட்டப்பட்டவருக்கு 31 வயது என்பதுடன், சிரேஷ்ட சட்டத்தரணி விடுத்த கோரிக்கையை கருத்தில் கொண்டு, அவர் செய்த குற்றத்திற்கு வருந்துவதாக சுட்டிக்காட்டி, சட்டத்தரணியின் அங்கீகாரத்துடன் குற்றப்பத்திரிகையில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கத.
(Visited 5 times, 1 visits today)