இலங்கை செய்தி

கனடாவுக்கு தப்பிச் செல்ல முயற்சித்த யாழ் இளைஞர் விமான நிலையத்தில் கைது

போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி கனடாவுக்குத் தப்பிச் செல்ல முற்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 34 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் சந்தேக நபரை கைது செய்ததுடன், சந்தேகநபர் அனுராதபுரத்தில் உள்ள தரகர் ஒருவரின் உதவியுடன் பெரும் தொகையான பணம் செலுத்தி கனடாவிற்கு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்போது கடவுச்சீட்டில் இருந்த புகைப்படம் குறித்து சந்தேகம் அடைந்த அதிகாரி, கணினியில் தகவல்களை பதிவு செய்ததுடன், குறித்த கடவுச்சீட்டு வேறு ஒருவருக்கு சொந்தமானது என தெரியவந்தது.

கடவுச்சீட்டின் உண்மையான உரிமையாளர் நீதிமன்றத்தால் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்ட ஒருவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதன்படி, சந்தேக நபரை குடிவரவு திணைக்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதன்போது சந்தேக நபரின் பையில் அவரது உண்மையான கடவுச்சீட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

(Visited 2 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content