இலங்கை

யாழ்ப்பாணம் – “நானே அம்மாவை கொலை செய்தேன் ”; 16 வயது சிறுவனின் அதிர்ச்சியளிக்கும் வாக்குமூலம்

யாழ்ப்பாணம், தெல்லிப்பழை பகுதியில் வீடொன்றில் இருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் பெண் ஒருவரின் சடலம் வெள்ளிக்கிழமை (03) மீட்கப்பட்டுள்ளது.

தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த ஹெனடிக் ஜஸ்மின் (வயது 37) எனும் பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் அவர் தனது இரு பிள்ளைகளுடன் வசித்து வந்த நிலையில் அவரது கணவர் வெளிநாட்டில் வசித்து வருகின்றார் என தெரியவந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (03) அன்று வீட்டில் தாயும் 16 வயதுடைய மகனும் மட்டுமே இருந்துள்ள நிலையில் மறுநாள் பெண் உயிரிழந்து சடலமாக காணப்பட்டுள்ளார்.இதன்போது பெண்ணின் மகன் வீட்டில் இருந்து காணாமல் போயிருந்ததுடன், வீட்டின் சுவர்களில் இரத்த கறைகளும் காணப்பட்டுள்ளது .

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில் காணாமல் போன சிறுவன் , பொலிஸாரால் திங்கட்கிழமை (06) கைது செய்யப்பட்டு அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் பொது “நானே தாயின் கழுத்தை நெரித்து கொலை செய்தேன்” என குறித்த சிறுவன் வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் , குறித்த சிறுவன் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் கைபேசி விளையாட்டுக்களுக்கு (மொபைல் கேம்ஸ்) அடிமையாகி கடுமையான மன உளைச்சலுக்குள்ளாகி இருந்தார் எனவும் அயலவர்கள் தெரிவித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்

மேலும் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!