இலங்கை செய்தி

“அலையோடு உறவாடு”: காங்கேசன்துறை கடற்கரையில் கோலாகலமாகத் தொடங்கிய உணவுத் திருவிழா

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை கடற்கரையில் “அலையோடு உறவாடு” எனும் மகுட வாசகத்துடன் மாபெரும் உணவுத் திருவிழா இன்று கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது.

வடமாகாண சுற்றுலாப் பணியகம் மற்றும் வலி. வடக்கு பிரதேச சபை ஆகியவை இணைந்து இந்த விசேட நிகழ்விற்கு ஏற்பாடு செய்துள்ளன.

வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் தலைமையில் இன்று காலை ஆரம்பமான இந்தத் திருவிழா, இரவு வரை தொடர்ந்து நடைபெறவுள்ளது.

இதில் எமது மண்ணின் பாரம்பரிய உணவுகள், உள்ளூர் உற்பத்திப் பொருட்களின் விற்பனைச் சந்தை மற்றும் கண்கவர் பண்பாட்டு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

இவற்றுடன் சிறுவர்களுக்கான மகிழ்வூட்டும் விளையாட்டுக்கள் மற்றும் மாலை வேளையில் இடம்பெறவுள்ள பிரம்மாண்டமான இன்னிசை கச்சேரி என்பனவும் மக்களைக் கவரும் வகையில் அமையவுள்ளன.

உள்ளூர் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையிலும், உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும் இந்தத் திருவிழா முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Puvan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!