இலங்கை

யாழ். மாவட்டத்தில் உருளைக்கிழங்கு உற்பத்தியில் விவசாயிகள் பாதிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படவிருந்த உருளைக்கிழங்கு விதைகள் பழுதடைந்துள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அது தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் இன்று(18) ஏற்பாடு செய்யப்பட்டது.

உலக வங்கியின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் யாழ் மாவட்ட உருளைக்கிழங்கு செய்கையாளர்களுக்கு வழங்குவதற்காக கொழும்பிலிருந்து எடுத்துவரப்பட்ட 16 மில்லியன் ரூபா பெறுமதியான 21 மெற்றிக் தொன் விதை உருளைக்கிழங்கு பழுதடைந்த நிலையில் காணப்படுவதாக விவசாயிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

குறித்த விதை உருளைக்கிழங்கு குப்பிளான் பகுதியில் உள்ள களஞ்சியத்தில் இறக்கப்பட்ட நிலையில் குறித்த கிழங்குகள் பழுதடைந்த நிலையில் காணப்பட்டமை அவதானிக்கப்பட்டது.

விவசாயிகளுக்கு வழங்குவதற்காக எடுத்துவரப்பட்ட உருளைக்கிழங்கின் பெரும்பாலானவை அழகிய நிலையில் இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து எடுத்து வரும்போதே விதைகள் பழுதடையும் தன்மை இருப்பது அவதானிக்கப்பட்டதாகவும் இதனால் விவசாயிகள் குறித்த விதை உருளைக்கிழங்கை நடுகை செய்வதற்கு மறுத்துள்ளதாக தெரியவருகிறது.

 

(Visited 1 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content