ஐரோப்பா

சட்டவிரோதமாக புலம்பெயர்ந்து வருவோருக்கு இடமளிக்கமுடியாமல் போராடும் இத்தாலி!

வட ஆபிரிக்கா மற்றும் பால்கனில் இருந்து வரும் புலம்பெயர்வோருக்கு இடமளிக்க முடியாமல் இத்தாலி போராடி வருகின்ற நிலையில், நாட்டின் செஞ்சிலுவை சங்கம் சர்வேதேச முயற்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இத்தாலியின் தெற்குப் புறக்காவல் நிலையமான லம்பேடுசா தீவில், வார இறுதியில் 4,200க்கும் அதிகமான குடியேற்றவாசிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக அந்நாட்டின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள உள்ளுர் அதிகாரி, “நான் 1990 களில் இருந்து புலம்பெயர்ந்தோர் தொடர்பான பிரச்சனைகளை கையாண்டு வருகிறேன். நான் எல்லாவற்றையும் பார்த்திருக்கிறேன். ஆனால் என்னால்இப்படியான ஒரு நிலைமையை  கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. நகரம் அவசரநிலையில் உள்ளது.” எனக் கூறியுள்ளார்.

இதேவேளை கடந்த ஆண்டு இதேகாலக்கட்டத்துடன்  ஒப்பிடும்போது, 53,000 பேர் சட்டவிரோதமாக கடல்வழி பயணங்களை மேற்கொண்டு இத்தாலிக்கு வருகை தந்துள்ளதாகவும், இதுவரை மொத்தமாக 107,500 இற்கும் அதிகமானோர் சட்டவிரோதமாக புலம்பெயர்ந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

(Visited 12 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்