ஐரோப்பா

ரஷ்யா உரிமை கோரும் பிரதேசத்தை கட்டுப்படுத்த இன்னும் 04 வருடங்கள் தேவைப்படும் – 02 மில்லியன் வீரர்கள் உயிரிழப்பர்!

பிரிட்டிஷ் பாதுகாப்பு அதிகாரிகளின் கூற்றுப்படி, விளாடிமிர் புடின் ஏற்கனவே ரஷ்யாவின் ஒரு பகுதியாக அறிவித்த பிரதேசத்தைக் கைப்பற்ற விரும்பினால் நான்கு ஆண்டுகளுக்கு மேல் தேவைப்படும், கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் வீரர்களை இழக்க நேரிடும் எனக் கூறப்படுகிறது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மாஸ்கோவின் நிபந்தனைகளின் பேரில் ஒரு அமைதி ஒப்பந்தத்தை ஏற்க உக்ரைனைத் தள்ளுவதால், கெய்வ் போரில் தோல்வியடையும் அபாயம் இருப்பதாக எச்சரித்த நிலையில் இந்தக் கூற்று வந்துள்ளது.

டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகியவற்றை உள்ளடக்கிய டான்பாஸ் பகுதியின் முழுக் கட்டுப்பாடும் ரஷ்யாவின் வசம் இருக்க வேண்டும் என மொஸ்கோ முன்மொழிந்துள்ளது.

2022 இல் புடின் சட்டவிரோதமாக இணைத்த நான்கு பகுதிகளான சபோரிஜியா மற்றும் கெர்சனின் சில பகுதிகளும் இதில் அடங்கும்.

ஆனால் அவற்றை உரிமை கோரி இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகியும், ரஷ்யா இந்தப் பகுதிகளில் எதையும் முழுமையாகக் கட்டுப்படுத்தவில்லை.

இந்நிலையில் தற்போதைய முன்னேற்ற விகிதங்கள் மற்றும் உக்ரேனிய உயிரிழப்பு மதிப்பீடுகளின் அடிப்படையில், ரஷ்யா 4.4 ஆண்டுகள் தேவைப்படும் என்றும், அது இணைத்துள்ளதாகக் கூறும் பிரதேசங்களின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற கூடுதலாக 1.93 மில்லியன் உயிரிழப்புகளைச் சந்திக்கும் என்றும் பிரித்தானிய மதிப்பீடு கூறுகிறது.

 

(Visited 1 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்