இலங்கை

இலங்கையில் பெரும்பாலான தொழிலாளர்கள் போதைக்கு அடிமையாகியுள்ளதாக தகவல்!

இந்த நாட்டில் உள்ள தொழிலாளர்களில் பெரும்பாலானோர் தற்போது போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

மஹரகம பிரதேசத்தில் இடம்பெற்ற போதைப்பொருள் தடுப்பு தொடர்பில் சமூகத்தை தெளிவுபடுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

சமூக பொலிஸ் ஸ்தாபனத்தின் ஐந்தாம் கட்டமாக கொழும்பு மத்திய பிரிவின் சமூக பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவிக்கும் வைபவம் நேற்று (20) மாளிகாவத்தை பி.டி.சிறிசேன விளையாட்டரங்கில் இடம்பெற்றது.

பொதுப் பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் மற்றும் பதில் பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் தேஷ்பந்து தென்னகோன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

08 பொலிஸ் களங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 2,100 சமூக பொலிஸ் உறுப்பினர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

(Visited 6 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!