இலங்கை

அனைத்து குழந்தைகளின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்துவது எமது கூட்டுப் பொறுப்பு – பிரதமர் ஹரிணி!

அனைத்து குழந்தைகளின் பாதுகாப்பையும், பின்னணி அல்லது சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல், எந்தக் குழந்தையையும் விட்டுவிடாமல், அவர்களின் பொருளாதார, சமூக மற்றும் மன நலனைப் பாதுகாப்பதும் நமது கூட்டுப் பொறுப்பாகும் என்று பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய கூறினார்.

அலரி மாளிகையில் சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு இன்று (01.10) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், எதிர்கால சந்ததியினர் சுதந்திரமாக வாழ்வதற்கு குழந்தைகளுக்கு உகந்த சூழலை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் இந்நிகழ்வின்போது உலக சிறுவர்கள் தின நினைவு முத்திரை மற்றும் தபால்தலை வெளியிடப்பட்டது. அத்துடன் நிகழ்வில் கலந்துகொண்ட சிறுவர்களுக்காகப் பல்வேறு செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட விசேட நிகழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

(Visited 3 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்